TNPSC Thervupettagam

துடிப்பான கிராமங்கள் திட்டம்

April 15 , 2023 785 days 1268 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு எல்லைக் கிராமமான கிபித்தூவில் 'துடிப்பான கிராமங்கள்' எனும்  ஒரு திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
  • இது எல்லையோரக் கிராமங்கள் மீதான மக்களின் வாழ்க்கை அணுகுமுறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்தத் திட்டம் எல்லையோரக் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்கள் அதே இடங்களில் தங்குவதனை ஊக்குவிக்கவும் வேண்டி உதவுகிறது.
  • இது இந்த கிராமங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்வதைத் தடுக்கவும் மற்றும் எல்லையில்  பாதுகாப்பைப் பலப்படுத்தவும் உதவும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் விரிவான ஒரு வளர்ச்சிக்காக 19 மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளில் 2967 கிராமங்கள்  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • இவை அனைத்தும் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்