TNPSC Thervupettagam

துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் பதவி விலகல்

July 24 , 2025 12 days 83 0
  • துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் பதவி விலகல் என்பது, இடைக்கால காலியிடத்தைத் ஏற்படுத்தியுள்ளது என்பது, இது இந்திய வரலாற்றில் இதே போன்ற மூன்றாவது நிகழ்வாகும்.
  • முன்னதாக வி.வி. கிரி மற்றும் ஆர். வெங்கடராமன் ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகினர்.
  • அவர்களுக்குப் பிறகு முறையே கோபால் ஸ்வரூப் பதக் மற்றும் சங்கர் தயாள் சர்மா ஆகியோர் பதவியேற்றனர்.
  • அரசியலமைப்புச் சட்டமானது தற்காலிக துணைக் குடியரசுத் தலைவர் என்ற பதவியை ஏற்படுத்தப்படவில்லை.
  • இருப்பினும், துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் அதிகாரப் பூர்வத் தலைவராகவும் இருப்பதால், அவை துணைத் தலைவர் அவர் இல்லாத நேரத்தில் மாநிலங்களவைக்குத் தலைமை தாங்குவார்.
  • குடியரசுத் தலைவர் பதவியைப் பொறுத்தவரையில், அரசியலமைப்புச் சட்டம் ஆறு மாதங்களுக்குள் காலியிடத்தை நிரப்ப வேண்டும் என்று கோருகிறது.
  • ஆனால் துணைக் குடியரசுத் தலைவர் காலியிடத்திற்கு, அத்தகைய குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை.
  • அப்பதவி காலியான பிறகு தேர்தல் "முடிந்தவரை விரைவில்" நடத்தப்பட வேண்டும் என்பதை மட்டுமே கூறுகிறது.
  • தேர்தல் ஆணையம் அதற்குரிய தேர்தல் தேதியை அறிவிக்கும்.
  • இந்தத் தேர்தல் 1952 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
  • மரபுப் படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஏதேனும் ஒரு பொதுச் செயலாளர் சுழற்சி முறையில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
  • புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் தன்கரின் மீதமுள்ள பதவிக்காலம் மட்டுமல்லாமல், தான் பதவியேற்ற நாளிலிருந்து ஒரு முழுமையான ஐந்து ஆண்டு காலத்திற்கும் பதவி வகிப்பார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்