தனியார் துறை ஊழியர்களை அலுவலக நேரத்திற்குப் பிறகு பணி சார்ந்த தகவல் தொடர்புகளிலிருந்துப் பாதுகாக்க வேண்டி, 2025 ஆம் ஆண்டு துண்டிக்கும் உரிமை மசோதாவினை கேரளா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மசோதா ஊழியர்கள் அதிகாரப்பூர்வ வேலை நேரத்திற்கு அப்பால் வேலை தொடர்பான அழைப்புகள், மின்னஞ்சல்கள், செய்திகள் மற்றும் மெய்நிகர் கூட்டங்களைப் புறக்கணிக்க அனுமதிக்கிறது.
வேலை நேரத்திற்குப் பிறகு துண்டிக்கப்பட்டதற்காக ஊழியர்களை தண்டிக்கவோ அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உட்படுத்தவோ முடியாது.
இது நிறைவேற்றப்பட்டால், இது போன்ற ஒரு சட்டத்தை இயற்றிய முதல் இந்திய மாநிலமாக கேரளா மாறும்.
பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஏற்கனவே இதே போன்ற சட்டங்கள் உள்ளன.