TNPSC Thervupettagam

தூய்மைக் கலை நடவடிக்கை - கீரியைப் பாதுகாத்தல்

December 2 , 2019 2009 days 644 0
  • கீரியின் முடியைக் கடத்துவதைத் தடுக்கக் கூடிய முதலாவது நாடு தழுவிய (இந்தியா) நடவடிக்கையானது சமீபத்தில் நடத்தப்பட்டது.
  • “தூய்மைக் கலை நடவடிக்கை” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த நடவடிக்கையானது உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன.
  • கீரியின் முடியைக் கொண்டு வண்ணத் தூரிகைகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் இந்த நடவடிக்கையின் போது குறிவைக்கப்பட்டன.
  • இந்தியாவில் ஆறு வகையான கீரி இனங்கள் காணப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் போது "சாம்பல் நிறக் கீரியின்" முடியானது அதிகளவில் மீட்கப்பட்டது.
  • கீரி இனமானது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை IIன் பகுதி 2ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் அதன் உடல் பகுதியைக் கடத்துதல் அல்லது வைத்திருத்தல் என்பது பிணையில் வெளிவர முடியாத  குற்றமாகும்.
  • இந்த நடவடிக்கையானது வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அமைப்பினால் (WCCB - Wildlife Crime Control Bureau) நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்