கீரியின் முடியைக் கடத்துவதைத் தடுக்கக் கூடிய முதலாவது நாடு தழுவிய (இந்தியா) நடவடிக்கையானது சமீபத்தில் நடத்தப்பட்டது.
“தூய்மைக் கலை நடவடிக்கை” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த நடவடிக்கையானது உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன.
கீரியின் முடியைக் கொண்டு வண்ணத் தூரிகைகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் இந்த நடவடிக்கையின் போது குறிவைக்கப்பட்டன.
இந்தியாவில் ஆறு வகையான கீரி இனங்கள் காணப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் போது "சாம்பல் நிறக் கீரியின்" முடியானது அதிகளவில் மீட்கப்பட்டது.
கீரி இனமானது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை IIன் பகுதி 2ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் அதன் உடல் பகுதியைக் கடத்துதல் அல்லது வைத்திருத்தல் என்பது பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும்.
இந்த நடவடிக்கையானது வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அமைப்பினால் (WCCB - Wildlife Crime Control Bureau) நடத்தப்பட்டது.