தென் கொரியாவிற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பயணம்
September 8 , 2019 2111 days 575 0
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசு முறைப் பயணமாக தென் கொரியாவிற்குச் சென்றுள்ளார்.
இராணுவத் தளவாட ஒப்பந்தம் ஒன்று அங்கு கையெழுத்திடப்பட்டது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தென் கொரியத் துறைமுகங்களில் இது செயல்படும் போது இந்தியாவிற்குத் தளவாட உதவியை அளித்திட இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கின்றது.
“இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் முக்கியமான ஆயுத அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்களைத் தயாரிப்பதற்காக தென் கொரியாவைச் சேர்ந்த தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.
தென் கொரியாவின் “புதிய தெற்குக் கொள்கை” மற்றும் இந்தியாவின் “கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை” ஆகியவை இரு நாடுகளுக்கிடையே ஒரு சிறப்பு வாய்ந்த உத்தி சார்ந்த பங்குரிமையை ஏற்படுத்துவதற்கு உதவும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.