தென்மேற்குப் பருவமழையானது பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளிலிருந்து பின் வாங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது வழக்கமான தேதியை விட கிட்டத்தட்ட 40 நாட்களுக்குப் பிறகு (அக்டோபர் 9) பின்வாங்கியுள்ளது.
இந்தப் பருவமழையானது 2019 ஆம் ஆண்டிற்கு முன்னர் 1961 ஆம் ஆண்டில் மிகவும் தாமதமாக பின்வாங்கியது. 1961 ஆம் ஆண்டில் அக்டோபர் 1 அன்று பருவமழை பின்வாங்கத் தொடங்கியது.
பருவ மழையின் பின்வாங்கலுக்கான இரண்டு அத்தியாவசிய நிபந்தனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த பின்னர் இந்தப் பின்வாங்கல் அறிவிக்கப்பட்டது.
தொடர்ச்சியான எதிர் சூறாவளி சுழற்சி
ஈரப்பதத்தின் படிப்படியான குறைவு
காற்றின் திசையை மாற்றியமைத்தலானது ஈரப்பதத்தைக் குறைக்கும். மேலும் இது வட இந்தியாவில் வெப்பநிலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.