தெற்காசியாவின் மிகப்பெரிய மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பு
June 3 , 2025 10 days 56 0
தெற்காசியாவின் "மிகப்பெரியதான" 20 மெகாவாட் திறன் கொண்ட மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பு (BESS) புது தில்லியின் கிலோகாரி எனுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இது வணிக ரீதியாகச் செயல்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டு அளவிலான இந்தியாவின் மிகப்பெரிய மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பு ஆகும்.
இது மிகவும் சிறந்தப் பாதுகாப்பு, வெப்ப நிலைத் தன்மை மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மைக்குப் பெயர் பெற்ற மிக மேம்படுத்தப் பட்ட லித்தியம் இரும்பு பாஸ்பேட் (LFP) என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
லித்தியம்-இரும்பு பாஸ்பேட் (LiFePO4) வகையிலான இந்த மின்கலன்களில், லித்தியம் உலோக ஆக்சைடுக்குப் பதிலாக லித்தியம் உலோக பாஸ்பேட் கேத்தோடாகப் (எதிர் மின்வாய்) பயன்படுத்தப்படுகிறது.