2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் 29-வது மாநிலமாக மாறியதைக் குறிக்கும் வகையில், தெலங்கானா மாநிலம் தனது 12வது மாநிலம் உருவான தினத்தை 2026 ஆம் ஆண்டு ஜூன் 2 அன்று கொண்டாடியது.
2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு ஜூன் 2 அன்று தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.
தெலங்கானா பகுதியானது 1956 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப் பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டதோடு இதுவே தனித் தெலங்கானா மாநிலத்திற்கான கோரிக்கைகளுக்கு வழி வகுத்தது.
2001 ஆம் ஆண்டில் கே. சந்திரசேகர் ராவ் (KCR) என்பவரால் தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) கட்சி தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து நவீன தெலங்கானா இயக்கம் வேகமெடுத்தது.