TNPSC Thervupettagam

தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவு

June 22 , 2025 8 days 63 0
  • இந்த ஆண்டானது 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று அவசரநிலை அமல் படுத்தப் பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இது 1975 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு அறிவிக்கப்பட்டது.
  • 1971 ஆம் ஆண்டில் நாட்டின் அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தியின் மக்களவைத் தேர்வினை நீதிமன்றம் ரத்து செய்தது.
  • 21 மாத காலம் நீண்ட தேசிய அவசரநிலையானது 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அன்று நீக்கப்பட்டது.
  • இந்தியாவின் பாதுகாப்புக் காரணம் அல்லது அதன் ஒரு பகுதியானது போர், வெளிப் புறத் தாக்குதல் (இது வெளிப்புற அவசரநிலை) அல்லது ஆயுதக் கிளர்ச்சி (உள்நாட்டு அவசர நிலை) ஆகியவற்றால் அச்சுறுத்தப்படும்போது, ​​352வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவரால் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப் படுகிறது.
  • இது 6 மாதங்களுக்கு நீடிக்கும் என்பதோடு மேலும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் காலவரையின்றி நீட்டிக்கப் படலாம்.
  • 1975 ஆம் ஆண்டு 38வது திருத்தச் சட்டம் ஆனது, போர், வெளிப்புறத் தாக்குதல், ஆயுதம் ஏந்திய ஒரு கிளர்ச்சி அல்லது எதிர்வரும் அபாயம் ஆகியவற்றின் ஒரு அடிப்படையில் குடியரசுத் தலைவரால் அவசரகால பிரகடனங்களை அறிவிக்க அனுமதிக்கிறது.
  • ஆனால், இங்கு 1978 ஆம் ஆண்டு 44வது திருத்தச் சட்டம் ஆனது, "உள்நாட்டுக் கலவரம்" என்பதை "ஆயுதமேந்தியக் கிளர்ச்சி" என்று மாற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்