டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 அன்று ஆசிரியர்கள் தினத்தைக் கொண்டாடுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தார் என்பதோடு இவர் ஒரு தத்துவஞானி, அறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார்.
இவர் இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும் (1952–1962) இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் (1962–1967) பணியாற்றினார்.
துணைக் குடியரசுத் தலைவராவதற்கு முன்பு சோவியத் யூனியனுக்கான இந்தியத் தூதராகப் (1949–1952) பணியாற்றினார்.
இவர் 1954 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருதைப் பெற்றார், மேலும் 1963 ஆம் ஆண்டில் ஐக்கிய பேரரசால் ஆர்டர் ஆஃப் மெரிட் விருதும் வழங்கப்பட்டது.