தேசிய ஆயுஷ் திட்டத்தைத் தொடர்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டமானது 01-04-2021 முதல் 31-03-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆயுஷ் திட்டமானது மத்திய அரசின் நிதியுதவி பெறும் ஒரு திட்டமாகும்.
இது ஆயுஷ் அமைச்சகத்தினால் அமல்படுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் ஆயுஷ் சுகாதார சேவை (அ) மருத்துவக் கல்வியை வழங்குவதற்கு முயற்சிக்கும் மாநில (அ) ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு உதவி வழங்குவதன் மூலம் சுகாதாரச் சேவையிலுள்ள குறைகளை இத்திட்டம் நிவர்த்தி செய்கிறது.