2025 ஆம் ஆண்டிற்கான தேசிய இணைய ஆளுகை விருதுகளுக்காக 6 பிரிவுகளில் 19 திட்டங்கள்/முன்னெடுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான தேசிய இணைய ஆளுகை விருதுகளில், மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள ரோகிணி கிராமப் பஞ்சாயத்து, அதன் மகத்தான எண்ணிம முன்னெடுப்பிற்காகத் தங்கப் பதக்கத்தினை வென்றது.
திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மேற்கு மஜ்லிஷ்பூர் என்ற கிராமப் பஞ்சாயத்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றது.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் அமைந்துள்ள சுகாதி கிராமப் பஞ்சாயத்திற்கு ஜூரி (தேர்வு மன்ற) விருது வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள பால்சானா கிராமப் பஞ்சாயத்து மற்றொரு ஜூரி விருதினை வென்றது.