ஐதராபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இணையவெளித் தடயவியல் ஆய்வகத்தை (NCFL) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
இது ஐதராபாத் நகரின் ராமந்தபூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள மத்தியத் தடய அறிவியல் ஆய்வகத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் இணையவெளி மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவானது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவெளிக் குற்றத் தடுப்புத் திட்டத்தின் கீழ் மத்தியத் தடய அறிவியல் ஆய்வகத்தின் வளாகத்தில் தேசிய இணைய வெளித் தடயவியல் ஆய்வகத்தை அமைத்துள்ளது.
தேசிய இணையவெளித் தடயவியல் ஆய்வகமானது, எண்ணிம தடயவியல் துறையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக வேண்டி 4 சிறப்பு உயர் தொழில்நுட்ப அலகுகளை உருவாக்கியுள்ளது.