பிரதமர் அவர்கள் தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இது 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களின் கருத்தைக் கேட்பதற்காக வேண்டி ஒருங்கிணைக்கப் பட்டது.
இது சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக ஜனவரி 12 அன்று நடத்தப்பட்டது.
மேலும் இந்திய அரசானது சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடுகின்றது.
முதலாவது தேசிய இளைஞர் நாடாளுமன்றமானது ”புதிய இந்தியாவின் குரலாக இரு, தீர்வுகளைக் கண்டுபிடி மற்றும் கொள்கைகளுக்குப் பங்களி” என்ற கருத்துருவின் கீழ் 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சேவைத் திட்டமானது தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தை ஒருங்கிணைக்கின்றது.