மக்களவைச் செயலகத்துடன் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் இணைந்து 3வது தேசிய இளையோர் பாராளுமன்ற விழாவினை ஏற்பாடு செய்துள்ளன.
வரும் ஆண்டுகளில் பல்வேறு தொழில்துறைகளில் நுழைய உள்ள 18 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் வரையிலான இளையோர்களின் கருத்தினைக் கேட்பதே இந்த விழாவின் நோக்கமாகும்.
தேசிய அளவில் வெற்றி பெறும் முதல் 3 இளம் வெற்றியாளர்களுக்கு அதன் பாராட்டு விழாவின் போது மக்களவைச் சபாநாயகரின் முன்பு உரையாற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.