இது இந்தியாவில், விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான ஒரு சட்ட வடிவிலான சட்டப்பூர்வக் கட்டமைப்பை வழங்கும்.
தற்போது, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனமானது, உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
விளையாட்டுத் துறையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு வாரியத்தினை அமைப்பதற்கு இந்த மசோதா உதவும்.
இது திறன்மிக்க மற்றும் தன்னிச்சையாகச் செயல்படுகின்றப் பணியாளர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இது விளையாட்டு வீரர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதியை அடையச் செய்ய முயல்கிறது.
ஊக்க மருந்துக்கு எதிராகப் போராடுவதற்கு வேண்டி முகமைகளின் ஒத்துழைப்பை இது மேம்படுத்தும்.