முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா அவர்கள் சிறுபான்மை சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
இதற்கு முன்பு ஆணையத்தின் தலைவராக சையத் கயோருல் ஹசன் ரிஸ்வி (Syed Ghayorul Hasan Rizvi) இருந்தார்.
இது சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1992 என்பதின் கீழ் அமைக்கப் பட்டது.
ஆறு மதச் சமூகங்கள், அதாவது; முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜோராஸ்ட்ரியர்கள் (பார்சிக்கள்) மற்றும் சமணர்கள் ஆகியோர் இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2014 ஆம் ஆண்டில், சிறுபான்மைச் சமூகமாக கடைசியாக அறிவிக்கப்பட்டது சமணர்கள் சமூகமாகும்.