TNPSC Thervupettagam

தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகம்

January 9 , 2026 2 days 43 0
  • இந்தியா உலகின் இரண்டாவது தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகத்தை (NESL) புது டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் (CSIR) தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் திறந்து வைத்துள்ளது.
  • NESL ஆனது இந்தியப் பருவநிலை சூழல்களின் கீழ் காற்று மாசுபாடு கண்காணிப்பு கருவிகளைச் சோதித்தல், அளவுத் திருத்தம் செய்தல் மற்றும் சான்றளிப்பதற்கான ஓர் உச்ச நிலை தேசிய மையம் ஆகும்.
  • இந்த ஆய்வகம் ஆனது இந்தியாவிற்கென குறிப்பிட்ட தரநிலைகளை உருவாக்குவதையும், தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP) போன்ற மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் காணப்படும் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் தூசி மாசுபாடு நிலைகளுக்கான கருவிகளை அளவுத் திருத்தம் செய்வதன் மூலம் NESL துல்லியமான மற்றும் தரப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் தரவை வழங்குகிறது.
  • இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே தேசிய அளவிலான சுற்றுச்சூழல் தர ஆய்வகங்களைக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்