பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 ஆனது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உதவுவதற்காக ஒரு தேசியக் குழுவை (NEC – National Executive Committee) அமைப்பதற்கு வேண்டி மத்திய அரசிற்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளது.
இந்தக் குழுவானது தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளும். மேலும் இந்தக் குழுவானது இந்தத் திட்டம் வருடந்தோறும் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யும்.
இந்தக் குழுவின் தலைவராக மத்திய உள்துறைச் செயலாளர் இருப்பார்.