மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் தேசிய நீர் மாநாட்டைத் துவக்கி வைத்துள்ளார்.
“நீர் பெறுவதற்கான உரிமைச் சட்டம்” அல்லது “நீர் உரிமைகள் சட்டம்” ஆகியவற்றின் வழிகாட்டுதல்களை இறுதி செய்வதற்காக இந்த மாநாடு நடைபெற்றது.
நீர் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற ஒரு சட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்ற நாட்டின் முதலாவது மாநிலமாக இது விளங்கும்.