TNPSC Thervupettagam

தேசிய நீர்வழிப் பாதை – 2ல் முதலாவது சரக்குப் போக்குவரத்து

November 3 , 2019 2084 days 1213 0
  • ஹால்டியா கப்பல் துறை வளாகத்திலிருந்து உள்நாட்டு நீர்வழிப் பாதை – 2ன் (National Waterway - 2) வழியே ஒரு முக்கிய கொள்கல சரக்குக் கப்பலானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று குவஹாத்தியின் பாண்டுவில் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் (IWAI - Inland Waterways Authority of India) முனையத்திற்குச் செல்ல இருக்கின்றது.
  • இந்த 12-15 நாட்கள் பயணமானது பின்வருவனவற்றின் வழியே செல்லும் ஒரு ஒருங்கிணைந்த உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகும்.
    • தேசிய நீர்வழிப் பாதை - 1 (கங்கை நதி)
    • தேசிய நீர்வழிப் பாதை - 97 (சுந்தரவனக் காடுகள்)
    • இந்தியா – வங்க தேச நெறிமுறைப் பாதை (Indo Bangladesh Protocol - IBP) மற்றும்
    • தேசிய நீர்வழிப் பாதை - 2 (பிரம்மபுத்ரா நதி)
  • இந்த உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துப்  பாதையில், அதாவது NW-2 இல் முதன்முதலில் மேற்கொள்ளப்படும் கொள்கல சரக்குப் போக்குவரத்து இதுவேயாகும்.

 

IBP பற்றி

  • இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையிலான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தமானது (PIWTT - Protocol on Inland Water Transit and Trade) 2018 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • இரு நாடுகளைச் சேர்ந்த கப்பல்களின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் சரக்குப் போக்குவரத்திற்கு வேண்டி அவற்றின் நீர்வழிகளைப் பயன்படுத்துவதற்காக பரஸ்பர நன்மை பயக்கும் முறைகளை இது அனுமதிக்கின்றது.
  • IBP பாதையானது NW - 1ன் கொல்கத்தாவிலிருந்து (இந்தியா) NW - 2ன் (பிரம்மபுத்ரா நதி) சில்காட் (அசாம்) மற்றும் NW - 16ன் (பராக் நதி) கரிம்கஞ்ச் (அசாம்) ஆகியவை வரை நீண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்