பிரதமர் தேசிய நெடுஞ்சாலை 66ன் மீது அமைந்த 13 கிலோ மீட்டர் அளவிற்கு இருவழிப்பாதையான கொல்லம் புறவழிச் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்த புறவழிச்சாலை மொத்தம் 1540 மீட்டர்கள் நீளத்திற்கு அஷ்டமுடி ஏரியின் மீது மூன்று பெரிய பாலங்களைக் கொண்டதாகும்.
கொல்லம் புறவழிச்சாலை ஆலப்புழாவிற்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையேயான பயண தூரத்தைக் குறைப்பதோடு கொல்லம் நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.