TNPSC Thervupettagam

தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு கொண்ட அடையாளப் பலகைகள்

October 8 , 2025 11 days 32 0
  • இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு கொண்ட செங்குத்து அடையாளப் பலகைகளை நிறுவ உள்ளது.
  • இந்தப் பலகைகள் ஆனது நெடுஞ்சாலை எண், சங்கிலித் தொடர் தொலைவுக் குறியீடு மற்றும் அவசர தகவல் தொடர்பிற்கான விவரங்கள் போன்ற குறிப்பிட்டத் தகவல்களைக் கொண்டிருக்கும்.
  • நெடுஞ்சாலை ரோந்து, சுங்கச் சாவடி மேலாளர், உள்ளக பொறியாளர் மற்றும் அவசர உதவி எண் 1033 ஆகியவற்றுக்கான தொடர்பு எண்கள் இதில் சேர்க்கப்படும்.
  • QR குறியீடுப் பலகைகள் ஓய்வுப் பகுதிகள், சுங்கச்சாவடிகள், சரக்குந்துகள் நிறுத்துமிடங்கள், நெடுஞ்சாலை தொடக்க மற்றும் முடிவுப் பகுதிகளுக்கு அருகில் வைக்கப் படும்.
  • சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், பயணிகள் முக்கியமான நெடுஞ் சாலைத் தகவல்களை எளிதாக அணுகுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்