TNPSC Thervupettagam

தேசிய மக்கள் தொகை ஆணையம்

August 28 , 2020 1755 days 2068 0
  • தேசிய மக்கள் தொகை ஆணையமானது 2011-36 ஆகிய காலகட்டத்திற்கான மக்கள் தொகை கணிப்பு குறித்த தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
  • இந்த ஆணையமானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • நாட்டின் பாலின விகிதமானது 943 (2011 ஆம் ஆண்டில்) என்ற அளவிலிருந்து 957 (2036 ஆம் ஆண்டில்) ஆக அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்தியாவின் மக்கள் தொகையானது 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2036 ஆம் ஆண்டில் 1.52 பில்லியனை எட்ட உள்ளது.
  • இந்தியாவின் மக்கள் தொகையானது 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2036 ஆம் ஆண்டில் 25% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • 2011 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதமானது 12.5% ஆக இருக்கும்.
  • இது 2021-31 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மேலும் 8.4% என்ற அளவிற்குக் குறைய இருக்கின்றது.
  • 2031 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவானது சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்க உள்ளது.
  • பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை முறையே 3.5 மற்றும் 3.7 என்ற அளவில் மிக உயரிய மொத்தப் பிறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது.
  • 2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை அதிக அளவிலான வெளியக இடப்பெயர்வு கொண்ட மாநிலங்களாக உள்ளன.
  • அதே வேளையில், குஜராத், மகாராஷ்டிரா, தில்லி மற்றும் ஹரியானா ஆகியவை உள்ளக இடப்பெயர்வில் நேர்மறைத் தன்மையுடன் உள்ளன.
  • கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்கள் 9% மக்கள் தொகை வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது நாட்டில் உள்ள நகர்ப்புற மக்கள் தொகையானது 2036 ஆம் ஆண்டில் 57% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
  • 2036 ஆம் ஆண்டில் பெண்களுக்கான சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு 80 ஆகவும் ஆண்களுக்கான சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு 74 ஆகவும் கொண்டிருக்கும் ஒரே இந்திய மாநிலம் கேரளா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்