தேசிய மக்கள் தொகை ஆணையமானது 2011-36 ஆகிய காலகட்டத்திற்கான மக்கள் தொகை கணிப்பு குறித்த தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த ஆணையமானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
நாட்டின் பாலின விகிதமானது 943 (2011 ஆம் ஆண்டில்) என்ற அளவிலிருந்து 957 (2036 ஆம் ஆண்டில்) ஆக அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
இந்தியாவின் மக்கள் தொகையானது 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2036 ஆம் ஆண்டில் 1.52 பில்லியனை எட்ட உள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகையானது 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2036 ஆம் ஆண்டில் 25% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
2011 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதமானது 12.5% ஆக இருக்கும்.
இது 2021-31 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மேலும் 8.4% என்ற அளவிற்குக் குறைய இருக்கின்றது.
2031 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவானது சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்க உள்ளது.
பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை முறையே 3.5 மற்றும் 3.7 என்ற அளவில் மிக உயரிய மொத்தப் பிறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது.
2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை அதிக அளவிலான வெளியக இடப்பெயர்வு கொண்ட மாநிலங்களாக உள்ளன.
அதே வேளையில், குஜராத், மகாராஷ்டிரா, தில்லி மற்றும் ஹரியானா ஆகியவை உள்ளக இடப்பெயர்வில் நேர்மறைத் தன்மையுடன் உள்ளன.
கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்கள் 9% மக்கள் தொகை வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது நாட்டில் உள்ள நகர்ப்புற மக்கள் தொகையானது 2036 ஆம் ஆண்டில் 57% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
2036 ஆம் ஆண்டில் பெண்களுக்கான சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு 80 ஆகவும் ஆண்களுக்கான சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு 74 ஆகவும் கொண்டிருக்கும் ஒரே இந்திய மாநிலம் கேரளா ஆகும்.