TNPSC Thervupettagam

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு

December 25 , 2019 2021 days 1179 0
  • மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை (National Population Register - NPR) புதுப்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.
  • NPR என்பது நாட்டில் உள்ள வழக்கமான குடியிருப்பாளர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு மொத்தப் பதிவேடு ஆகும்.
  • NPR தரவுதளத்தில் மக்கள்தொகை மற்றும் உயிர்த்தரவு விவரங்கள் இருக்கும்.
  • NPR விதிமுறைகளின் படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரு வசிப்பிட அடையாள அட்டை (Resident Identity Card - RIC) வழங்கப் படும்.
  • இது நாட்டில் உள்ள அனைத்து மக்களின் விரிவான அடையாள தரவுதளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் மற்றும் 2003 ஆம் ஆண்டின் குடியுரிமை (குடிமக்களைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) விதிகள் ஆகியவற்றின் கீழ் உள்ளூர் (கிராமம்/துணைநிலை நகரம்), துணைநிலை மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் தயாரிக்கப் படுகின்றது.
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரும் NPRல் பதிவு செய்வது கட்டாயமாகும்.
  • NPR இன் நோக்கங்களுக்காக ஒரு குடியிருப்பாளர் என்பவர் கடந்த 6 மாதங்கள்/அதற்கு மேற்பட்ட காலத்திற்கு உள்ளூர்ப் பகுதியில் வசித்த ஒரு நபர் அல்லது அடுத்த 6 மாதங்கள்/அதற்கு மேற்பட்ட காலத்திற்கு அந்த பகுதியில் வசிக்க விரும்பும் ஒரு நபர் என வரையறுக்கப் படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்