TNPSC Thervupettagam

தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் 2025- டிசம்பர் 02

December 5 , 2025 14 hrs 0 min 3 0
  • மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தொழில்துறை விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள், MIC (மெத்தில் ஐசோசயனேட்) வாயு கசிவால் ஏற்பட்ட 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயு துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.
  • இந்தியாவில் உள்ள முக்கிய மாசுபாட்டுச் சட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, காற்றுச் சட்டம் 1981 மற்றும் நீர்ச் சட்டம் 1974 ஆகியவை அடங்கும்.
  • 1974 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட CPCB (மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்) இந்தியாவின் முக்கிய மாசுக் கண்காணிப்பு நிறுவனமாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Sustainable Living for a Greener Future" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்