இந்த தினமானது ஒவ்வோர் ஆண்டும் தேசிய மீன்வளத்துறை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தினால் கடைபிடிக்கப் படுகிறது.
நிலையான வள இருப்புகள் மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலைகள் போன்றவற்றை உறுதி செய்வதற்காக மீன்வளங்களை மேலாண்மை செய்யும் முறையை மாற்றுவதற்கான கவனத்தை ஈர்ப்பதையே இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த தினமானது டாக்டர் K.H. அலிகுன்ஹி மற்றும் டாக்டர் H.L. சௌத்ரி ஆகிய அறிவியலாளர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்படுகிறது.
இவர்கள் 1957 ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று இந்தியாவின் முதன்மை மீன் வகை இனங்களின் தூண்டப்பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்பத்தை (induced breeding technology) கண்டுபிடித்தனர்.
2021 ஆம் ஆண்டானது 21வது தேசிய மீன் வளர்ப்பு விவசாயிகள் தினத்தைக் குறிக்கிறது.