TNPSC Thervupettagam

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள்

January 2 , 2019 2350 days 1622 0
  • சமீபத்தில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனமானது 6 புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கப்பட்ட மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தமையாக அறிவித்திருக்கின்றது.
  • நாட்டில் இந்நிறுவனத்தின் கீழ் 3686 பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னங்கள்/மையங்கள் உள்ளன. தற்பொழுது இந்த எண்ணிக்கை 3693 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிறுவனத்தால் பாதுகாக்கப்படும் தளங்களில் உத்தரப்பிரதேசம் (745), கர்நாடகா (506) மற்றும் தமிழ்நாடு (413) ஆகியவை அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.
  • சமீபத்தில் சேர்க்கப்பட்ட புதிய புராதனச் சின்னங்களாவன
    • மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள 125 வருட பழமையான உயர்நீதிமன்றக் கட்டிடம்,
    • ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்திய சின்னங்கள் – ஆகா கானின் ஹவேலி மற்றும் ஹாதி கானா,
    • ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பழமையான நீம்ரானா பாஹோரி,
    • ஒடிசாவின் போலங்கீர் மாவட்டத்தின் ராணிப்பூர் ஜாரெயிலில் உள்ள கோவில்கள்,
    • உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கார் மாவட்டத்தின் கோதாலியில் உள்ள விஷ்ணு கோவில்.
  • 1958 ஆம் ஆண்டின் பழங்கால புராதனச் சின்னங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி மையங்கள் சட்டத்தின்படி பழமையான புராதனச் சின்னம் என்பது
    • ஏதேனும் ஒரு வடிவில் எழுப்பி அமைக்கப்பட்ட புராதனச் சின்ன அமைப்பு அல்லது
    • ஏதேனும் செயற்கையாக உண்டு பண்ணப்பட்ட ஒரு மேடை அல்லது புதைக்கப்பட்ட ஒரு இடம்.
    • ஏதேனும் குகை, பாறை வெட்டு சிற்பக்கலை, கல்வெட்டு
    • வரலாற்றுப் பூர்வமான, பழமை வாய்ந்த, கலை நுட்பமான ஒற்றைக்கல் சின்னம் ஆகியனவற்றைக் கொண்டதாகும்.
  • 2016 மற்றும் 2017 காலகட்டங்களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கான பட்டியலில் ஒரு புதிய தளமும் சேர்க்கப்படவில்லை.
  • 2015ம் ஆண்டில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நடவயல் என்னுமிடத்தில் உள்ள விஷ்ணு கோவிலே கடைசியாக இப்பட்டியலில் சேர்க்கப்பட்ட சின்னம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்