2018-19 ஆம் ஆண்டிற்கான தேசிய வருடாந்திர கிராமப்புற சுகாதாரக் கள ஆய்வானது சுவச் பாரத் திட்ட கிராமீன் என்ற திட்டத்திற்கு உலக வங்கி உதவித் திட்டத்தின் கீழ் உள்ள தனிச்சுதந்திர சரிபார்ப்பு ஆணையத்தினால் (IVA - Independent Verification Agency) நடத்தப்பட்டது.
இந்த கள ஆய்வின்படி,
93.1 சதவிகித குடும்பத்தினர் கழிவறைகளை அணுகக் கூடியவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
96.5 சதவிகித குடும்பத்தினர் கழிவறைகளை அணுகி அவற்றைப் பயன்படுத்தக் கூடியவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு திறந்த வெளிக் கழிப்பறையில்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட 90.7 சதவிகித கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறையில்லா கிராமங்களாக உறுதி செய்யப்பட்டன.