இரண்டு நாட்கள் அளவிலான 2025 ஆம் ஆண்டு தேசிய வேளாண் மாநாடு-ராபி அபியான் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது, 2025-26 ஆம் ஆண்டு ராபி பயிர் பருவத்திற்கான உத்திகளைத் திட்டமிடுவதற்காக நடத்தப்படும் விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, நீடித்த நிலையான வேளாண்மையினை ஊக்குவிப்பது மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.