TNPSC Thervupettagam

தேசியக் குழு

March 8 , 2021 1612 days 688 0
  • இந்தியா சுதந்திரம் அடைந்ததின் 75 ஆண்டுகளை நினைவு கூரும் வகையில் தேசிய அளவில் தேசியக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • இது 259 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உயர்மட்ட தேசியக் குழுவாகும்.
  • இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளனர்.
  • இந்தியாவின் 75வது சுதந்திர தினமானது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருகின்றது.
  • இந்த 75வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பாக, அதாவது 75 வாரங்களுக்கு முன்னதாக இந்த மாதம் 12 ஆம் தேதியன்று தொடங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
  • மார்ச் 12 ஆம் தேதியானது மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்றுப் புகழ்பெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் 91வது ஆண்டு விழாவைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்