மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் முதலாவது தேசியக் கூட்டுறவு மாநாட்டினை (சேகரிதா சம்மேளன்) தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த மாநாடு புதுடெல்லியிலுள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கப் பட்டது.
இது உலக அளவில் இந்தியக் கூட்டுறவு அமைப்புகளை ஊக்குவிக்கவும் வலுப்படுத்தச் செய்யவும் ஒரு தளத்தினை வழங்குவதற்குமான இந்தியாவின் முதல் கூட்டுறவு மாநாடாகும்.
இது IFFCO, இந்திய தேசியக் கூட்டுறவு குழுமம், அமுல், சஹகர் பார்தி, NAFED, KRIBHCO மற்றும் அனைத்துக் கூட்டுறவு அமைப்புகள்ஆகியவை ஒன்றிணைந்து நடத்தப்பட்ட மாநாடாகும்.