குஜராத்திலுள்ள காந்திநகரில் அமைந்துள்ள தேசியத் தடய அறிவியல் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி அடிப்படையிலான சிறப்பு மையத்தினை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்துள்ளார்.
இந்த மையமானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட மருந்துகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்விலும் அவை எங்கிருந்து கிடைக்கப் பெறுகின்றன என்று கண்டறிவதிலும் உதவும்.
மேலும் இந்தியக் காவல்துறைக்காக வேண்டி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விசாரிப்பதற்கான ஒரு காணொலிப் பயிற்சி மாதிரி ஒன்றையும் உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.