மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகமானது தேசியத் திருநர் ஆணையத்தை அமைத்துள்ளது.
மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் இந்த ஆணையத்தின் தலைவராக செயல்படுவார். மேலும் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பர்.
அச்சமூகத்திலிருந்து இந்தக் குழுவில் நியமிக்கப் பட்டுள்ள 5 உறுப்பினர்கள் பின்வருமாறு : லட்சுமி நாராயண் திருப்பதி, கோபி சங்கர் (மதுரை), மீரா பரிடா, சைனாப் ஜாவித் பட்டேல் மற்றும் காக் சிங்டாபம் சியாம்சந்த் ஷர்மா ஆகியோராவர்.
இந்த ஆணையமானது திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.