தேசியப் பசுமை தீர்ப்பாயம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
October 16 , 2021 1659 days 659 0
“தேசியப் பசுமை தீர்ப்பாயமானது தன்னிச்சையான அதிகாரங்களைக் கொண்டு உள்ளது எனவும் சுற்றுச்சூழல் சார்ந்தப் பிரச்சினைகளை அது தானே விசாரிக்க முடியும்” என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.
சுற்றுச்சூழல் வழக்குகளை தேசியப் பசுமை தீர்ப்பாயமானது தாமாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது
2010 ஆம் ஆண்டு தேசியப் பசுமை தீர்ப்பாயச் சட்டத்தின் கீழ், 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று தேசியப் பசுமை தீர்ப்பாயம் நிறுவப்பட்டது.