தேசியப் பாதுகாப்பு மீதான 6வது புனே பேச்சுவார்த்தையானது (2021) புனே சர்வதேச மையத்தினால் தொடங்கப்பட்டது.
‘பேரிடர் மற்றும் பெருந்தொற்றுக் காலங்களில் தேசியப் பாதுகாப்பிற்கான தயார் நிலை’ என்ற ஒரு கருத்துருவின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு மீது பேரிடர்கள் மற்றும் பெருந்தொற்றுகளின் தாக்கங்கள் குறித்து பங்கேற்பாளர்கள் விவாதிப்பர்.
பேரிடர் தொடர்பான உத்திகளையும் அவர்கள் பரிந்துரைப்பர்.
இந்தப் பேச்சுவார்த்தையானது, புதுடெல்லியின் கொள்கை தொலைநோக்கு அறக் கட்டளை, மேம்பட்ட உத்திசார் ஆய்விற்கான மையம் மற்றும் சண்டிகரின் தீர்ப்பாய அறக்கட்டளை (தி டிரிபுயுன் டிரஸ்ட்) ஆகியவற்றுடன் இணைந்து புனே சர்வதேச மையத்தினால் நடத்தப்படுகிறது.