பஞ்சாப்பின் முன்னாள் தலைமை காவல் இயக்குநர் தீன்கர் குப்தா தேசியப் புலனாய்வு அமைப்பின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசியப் புலனாய்வு அமைப்பு என்பது இந்தியாவின் ஒரு முதன்மையான தீவிரவாத எதிர்ப்புப் பணிக்குழு ஆகும்.
உள்துறை அமைச்சகத்தின் ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பின் கீழ், மாநிலங்களின் எந்தவொரு சிறப்பு அனுமதியும் பெறாமல், பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களை இது விசாரிக்கிறது.
இது 2008 ஆம் ஆண்டு தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது மும்பையில் நிகழ்ந்த 26/11 தீவிரவாதத் தாக்குதலின் விளைவாக உருவாக்கப் பட்டது.