TNPSC Thervupettagam

தேசியப் புலனாய்வுத் தொடர் (NATGRID) திட்டம்

September 14 , 2019 2116 days 751 0
  • NATGRID திட்டத்தின் கீழ், குடியேற்ற நுழைவு & வெளியேறுதல், வங்கி மற்றும் தொலைபேசி விவரங்கள் தொடர்பான பதிவுகளின் தரவுத் தளத்துடன் “சமூக ஊடகக் கணக்குகளை இணைக்க" மத்திய அரசாங்கம் முன்மொழிகின்றது.
  • NATGRID தரவுத் தளமானது தொலைத் தொடர்பு, வரி தொடர்பான கோப்புகள், வங்கி, குடியேற்றம் போன்ற துறைகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தகவல்களைத் தொகுக்கும்.
  • நுண்ணறிவுப் பிரிவு, RAW உளவு அமைப்பு (Research and Analysis Wing)  போன்ற குறைந்தது 10 மத்திய நிறுவனங்கள் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளுக்காக இந்தப் பாதுகாக்கப்பட்ட தளத்தில் உள்ள தரவை அணுகும்.
  • இந்தத் திட்டமானது 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • NATGRID தலைவர்: ஆஷிஷ் குப்தா இந்திய ஆட்சிப் பணி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்