தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF – National Disaster Responsive Force)
January 22 , 2021
1584 days
2407
- NDRF ஆனது ஜனவரி 18 அன்று தனது 16வது உருவாக்கத் தினத்தை அனுசரித்தது.
- இது நாட்டின் சிறப்பு வாய்ந்த பல்திறன் கொண்ட ஒரு மனித நேயப் படையாகும்.
- இது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
- இது 2006 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று செயல்பாட்டிற்கு வந்தது.
- இது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) கீழ் உள்ளது.
- NDMA அமைப்பின் தலைவர் பிரதமர் ஆவார்.
- இந்தியாவில் பேரிடர்களை மேலாண்மை செய்வது மாநில அரசின் பொறுப்பாகும்.
- இயற்கைப் பேரிடர் மேலாண்மைக்கான மத்திய அரசின் ”தலைமை அமைச்சகம்” மத்திய உள்துறை அமைச்சகமாகும்.
Post Views:
2407