March 9 , 2026
15 hrs 0 min
45
- இந்தியாவின் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம் திண்டுக்கல் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது.
- இந்த மையம் தேவாங்குகளின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துகிறது.
- தேவாங்கு என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையின் வறண்ட காடுகள் மற்றும் புதர்க்காடுகளில் காணப்படும் ஒரு சிறிய மரவாழ் பாலூட்டி இனம் ஆகும்.
- முன்னதாக, தமிழ்நாடு அரசு கடவூர் தேவாங்கு சரணாலயத்தை அறிவித்திருந்தது.
- இந்தச் சரணாலயம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஏழு பிரிவுகளில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
- இதில் தோப்பசாமிமலை, தண்ணீர்க்கரடு, முடிமலை மற்றும் டி. இடையப்பட்டி போன்ற காப்புக்காடுகள் அடங்கும்.

Post Views:
45