ஜம்மு பகுதியில் 37 தொகுதிகளும், காஷ்மீர் பிரிவில் 46 தொகுதிகளும், லடாக்கில் நான்கு தொகுதிகளும் கொண்ட முந்தைய ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் இருந்தது.
இது தவிர, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த காஷ்மீருக்கு 24 இடங்கள் ஒதுக்கப் பட்டு அவை காலியாக உள்ளன.
2019 ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட ஆணையை இந்த ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த ஆணையம் ஜம்மு காஷ்மீரில் மேலும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்த்து, அதன் எண்ணிக்கையை 87ல் இருந்து 90 ஆக உயர்த்தியுள்ளது.
இது ஜம்மு பிராந்தியத்திற்கு மேலும் ஆறு இடங்களை அதிகரித்து அங்குள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 43 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழிகிறது.
இந்த ஆணையம் காஷ்மீர் பிராந்தியத்தில் மேலும் ஒரு தொகுதியைச் சேர்த்து, அங்கு உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 47 ஆக உயர்த்தியது.
இந்த ஆணையத்தின் உத்தரவுகள் சட்டத்திற்கு உண்டான ஒரு அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் இதன் உத்தரவுகளை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடியாது.