முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அரசாங்கம் ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைத்துள்ளது.
இது ஜம்மு-காஷ்மீர் ஒன்றியம், வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யும்.
தொகுதி மறுவரையறை என்பது ஒரு சட்டமன்ற அமைப்பைக் கொண்ட ஒரு மாநிலத்தில் பிராந்தியத் தொகுதிகளின் வரம்புகளை அல்லது எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையாகும்.
2002 ஆம் ஆண்டின் தொகுதி மறுவரையறைச் சட்டத்தின்படி அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் தொகுதி மறுவரையறை செய்யப்பட இருக்கின்றன.
இந்திய ஜனாதிபதியால் குறிப்பிடப்படும் தேதியில் அந்த ஆணையத்தின் உத்தரவுகள் செயல்படுத்தப் படும்.
இந்த உத்தரவுகளின் நகல்கள் மக்களவை அல்லது சம்பந்தப்பட்ட சட்டமன்றத்தின் முன் வைக்கப் படும்.
இதில் எந்த மாற்றங்களுக்கும் அனுமதியில்லை.
தொகுதி மறுவரையறைச் சட்டம், 2002 இன் படி, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மறுவரையறை ஆணையத்தில் மூன்று உறுப்பினர்கள் இருக்க வேண்டும்:
தலைவராக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி இருக்க வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது அவர் பரிந்துரைத்த தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும்.
பதவி வழி உறுப்பினர்களாக மாநிலத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும்.