TNPSC Thervupettagam

தொலைபேசி ஒட்டுக் கேட்பு குறித்து உயர்நீதிமன்ற கருத்து

July 5 , 2025 14 hrs 0 min 18 0
  • ஒரு குற்றத்தைக் கண்டறிவதற்கான தொலைபேசி ஒட்டுக் கேட்பு நடவடிக்கையானது தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதாக உயர் நீதிமதின்றம் கூறி உள்ளது.
  • 1885 ஆம் ஆண்டின் இந்திய தந்திச் சட்டம் ஆனது தொலைபேசி ஒட்டுக் கேட்பை கட்டுப்படுத்துவதற்கான 'இட்சுமண ரேகை' என்ற வரம்பினை நிர்ணயித்தது.
  • நீதிமன்றத்தின் பங்கு இந்த வரம்பு மீறப்படுகிறதா இல்லையா என்பதை சரிபார்ப்பது மட்டுமே ஆகும்.
  • 1604 ஆம் ஆண்டில் முன் வைக்கப்பட்ட தனியுரிமைக்கான உரிமையானது, 1996 ஆம் ஆண்டு PUCL வழக்கில் உச்ச நீதிமன்றத்தினால் 21வது சரத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்டது.
  • உரிமையியல் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (PUCL) வழக்கின் தீர்ப்பை 2017 ஆம் ஆண்டு K.S. புட்டசாமி வழக்கில் அரசியலமைப்பு அமர்வு உறுதி செய்தது.
  • பொது அவசரநிலை அல்லது பொதுப் பாதுகாப்பு வழக்குகளில் மட்டுமே தொலைபேசி ஒட்டுக் கேட்பு அனுமதிக்கப்படுகிறது.
  • ஒரு சட்ட அடிப்படை இல்லாததால் இலஞ்ச வழக்கில் அளிக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு தொலைபேசி ஒட்டுக் கேட்பு உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்