குர்தாஸ் வாசமல்லி (66), வாய்வழியாக பதிவான பாரம்பரிய ஆவணங்கள் மற்றும் எழுத்தறிவு ஊக்குவிப்பு மூலம் தோடா மொழியைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்குத் தலைமை தாங்குகிறார்.
தோடா மொழி என்பது அதற்கென சொந்த எழுத்து வடிவங்கள் இல்லாத மற்றும் நீலகிரி மலைகளில் சில ஆயிரம் மக்களால் பேசப்படுகின்ற ஒரு பூர்வீக-தெற்கு திராவிட மொழியாகும்.
அழிந்து வரும் மொழிகளின் பாதுகாப்பு மற்றும் காப்புத் திட்டத்துடன் (SPPEL) இணைந்து, தமிழ் எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தி ஒரு தோடா அடித்தள நூல் ஒன்று உருவாக்கப்பட்டது.
அழிந்து வரும் இந்திய மொழிகளை ஆவணப்படுத்துவதற்காக கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் (CIIL) SPPEL திட்டத்தினை மேற் கொண்டுள்ளது.
CIIL ஆனது, தோடா போன்ற மொழிகளுக்கான டிஜிட்டல் காப்பகங்கள் மற்றும் அகராதிகளை உருவாக்குவதற்காக ஒலி-ஒளிக் கருவிகள் மற்றும் மொழியியல் மென்பொருளைப் பயன்படுத்துகிறது.
சஞ்சிகா வலைத்தளம் தோடா மொழி மாதிரிகள் மற்றும் ஒலிக் கோப்புகளைப் பொது அணுகலுக்காக வழங்குகிறது.