பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஆசாதி @ 75 – புதிய நகர்ப்புற இந்தியா : நகர்ப்புறப் பகுதியை மாற்றியமைத்தலுக்கான மாநாடு மற்றும் பொருட்காட்சி” என்ற ஒரு நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.
AMRUT திட்டம் மற்றும் பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் 75 நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
FAME-II திட்டத்தின் கீழ் 7 நகரங்களுக்கு 75 ஸ்மார்ட் மின்சாரப் பேருந்துகள் தொடங்கி வைக்கப் பட்டன.
அந்த ஏழு நகரங்களாவன : லக்னோ, வாரணாசி, கான்பூர், பிரயாக்ராஜ், கோரக்பூர், காசியாபாத் மற்றும் ஜான்சி ஆகியனவாகும்.