தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்திற்கு (TNPSC) வழங்க முன்மொழிந்துள்ளது.
இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நியமனங்களை ஒரு பொதுவான தேர்வு முறையின் கீழ் கொண்டுவரும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் (கூடுதல் பணிகள்) சட்டம், 2022-ஐ திருத்துவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
TNPSC மூலம் பல மாநில அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதைப் போலல்லாமல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நியமனங்கள், பதவி மற்றும் சேவையைப் பொறுத்து வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. இதில், நகராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்வு / நியமனக் குழுக்களிடையே ஆட்சேர்ப்பு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டு உள்ளன.
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம், இந்த ஆட்சேர்ப்புகளை TNPSC தலைமையிலான ஒரு பொதுவான வழிமுறையின் கீழ் கொண்டுவர முயல்கிறது என மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், சென்னை மாநகராட்சி மற்றும் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புப் பொறுப்பை அரசு TNPSC-யிடம் ஒப்படைக்க முடியும்.
எனவே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் ஆட்சேர்ப்புப் பொறுப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் (TNPSC) ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கூடுதல் பணிகளை வழங்கிய 2022 ஆம் ஆண்டு சட்டத்தின் செயல்பாட்டு எல்லையை இந்த மசோதா விரிவுபடுத்த முயல்கிறது.