நகர்ப்புற நதிகளைப் புத்துயிர்ப் பெறச் செய்தல் திட்டம்
May 7 , 2025 37 days 64 0
தேசியத் தூய்மைக் கங்கைத் திட்டமானது (NMCG), நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகளின் ஓரங்களில் அமைந்துள்ள 145 நகரங்களுக்கான ஒரு செயல் திட்டத்தினை அங்கீகரித்துள்ளது.
இத்திட்டமானது, அந்தந்த நதிகளின் வழித்தடங்களை / நீட்சிகளை வளமானதாகவும் நிலையானதாகவும் வைத்திருப்பதற்காக என்று 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் பாய்கின்ற நகர்ப்புற நதிகளைப் புத்துயிர் பெறச் செய்யும் ஒரு நோக்கில் 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நதி நகரங்கள் கூட்டணியின் (RCA) கீழ் இது உருவாக்கப் பட்டது.
சமீபத்தில், இந்திய அரசானது யமுனை நதியைப் புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில் ஒரு விரிவான 30 அம்ச செயல் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
யமுனை நதியின் சுற்றுச்சூழல் சார் (நீரோட்டத்தின் அளவு, காலம், தரம்) ஓட்டத்தை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
வெள்ளப்பெருக்குப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வேண்டி ஒரு பிரத்தியேக சிறப்புப் பணிக்குழு நிறுவப் பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஒரு பிரத்யேக “யமுனா கோஷ்” (யமுனா நிதி) நிறுவப்படும்.