இந்தியாவின் முதலாவது நடமாடும் சூரியசக்தி மேற்கூரை அமைப்பு குஜராத்தின் காந்தி நகரில் உள்ள சுவாமிநாராயண் அக்சர்தாம் கோவில் வளாகத்தில் நிறுவப் பட்டுள்ளது.
இந்த 10 ஒளி மின்னழுத்தத் திறன் கொண்ட PV போர்ட் அமைப்பானது, புது டெல்லியின் சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டது.
இந்தியா முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் மிக்க நகரங்களை உருவாக்குவதற்காக வேண்டி, மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பின் கீழ் இந்த அமைப்புகள் நிறுவப் பட்டுள்ளன.