இந்தியாவின் புனித நதியான கங்கையைப் புனரமைப்பதற்காகத் தொடங்கப்பட்ட நமாமி கங்கை திட்டத்தினை இயற்கையைப் புதுப்பிப்பதற்காகத் தொடங்கப்பட்ட 10 சிறந்த உலக மறுசீரமைப்புப் பணிகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் பத்து ஆண்டுகளுக்கான முன்னெடுப்பின் கீழ் இவை தேர்ந்தெடுக்கப்பட்டன.
இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் ஒரு உலகளாவிய இயக்கமாகும்.
கங்கை நதியைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து 2014 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் நமாமி கங்கை திட்டம் தொடங்கப்பட்டது.