கோவை, திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மூன்று விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கியதற்காக தமிழக அரசின் இந்த ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதைப் பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த G. சம்பத்குமார் முதல் பரிசைப் பெற்றார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த D. ஜெகதீஷ் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த V. காளிதாஸ் இதில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றனர்.
இயற்கை வேளாண்மை முறையை நன்கு கடைப்பிடித்து ஊக்குவிக்கும் மற்றும் சக இயற்கை விவசாயிகளை ஆதரிக்கும் விவசாயிகளை அரசின் நம்மாழ்வார் விருது ஊக்குவித்து கௌரவிக்கிறது.